யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை இழந்திருந்தாலும் சபையில் தொடர்ந்து வரும் வரவு செலவுத் திட்டம் உட்பட அனைத்து விடய...
யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை இழந்திருந்தாலும் சபையில் தொடர்ந்து வரும் வரவு செலவுத் திட்டம் உட்பட அனைத்து விடயங்களையும் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பில் ஆராய்ந்தே தீர்மானம் எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று காலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது..
யாழ் மாநகர சபையில் எங்கள் வேட்பாளர் வெற்றி பெற முடியாத நிலையில் மணிவண்ணணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதனூடாக் புதிய முதல்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் எமது கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படுவதென்பது தொடர்பில் ஆராய்ந்திருக்கிறோம்.
குறிப்பாக நாங்கள் எதிரணியில் இருக்கிறோம் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்ப்தோ அல்லது ஆதரிப்பதோ என்ற நிலைப்பாட்டை எடுப்பதில்லை. குறிப்பாக வரவுள்ள பட்ஜெட்டை ஆராய்ந்து அதனை ஆதரிப்பதா எதிர்ப்பதா என தீர்மானம் எடுப்போம்.
அதே போல ஏனைய சந்தர்ப்பங்களில் அந்தந்த பிரேரணையின் நன்மை தீமையை ஆராய்ந்த அதன் பின்னர் அது தொடர்பில் திர்மானம் எடுக்கப்படும்.
இனிவரும் காலங்களில் சபையின் விடயங்களில் சபை உறுப்பினர்கள் கட்சித் தலைமையோடு கலந்துரையாடி தீர்மானங்களை எடுத்து அதற்கமைய செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ் மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை இழந்தமைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் செயற்பாடுகளே காரணமென கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரனின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள மாவை சேனாதிராசா இது தொடர்பில் விரைவில் சுமந்திரனுக்கு தான் பதிலளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சுமந்திரனின் குற்றச்சாட்டக்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்தினர் குற்றம் சுமத்துவது ஒன்றும் புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் அதாவது பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் ஊடக சந்திப்பை நடாத்தி தலைவர் செயலாளர் பற்றி பேசியிருக்கின்றார்.
இந்த விடயங்கள் தொடர்பில் செயற்குழுவைக் கூட்டி பேச வேண்டும். அதே நேரம் அதற்கு நான் பதிலளிப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் பதிலளிக்க வேண்டும்.
ஆனால் இன்றைய (நேற்றைய) ஒரு பத்திரிகையில் ஆசிரியர் என்னை இழிவுபடுத்தி எழுதியதால் அதற்கு நான் பதிலளித்திருகிறேன். நாளை புத்தாண்டு. அதை எல்லாரும் கொண்டாட வேண்டும். அதே நேரம் கொரோனாவால் துன்பத்தில் இருக்கின்றனர். ஆகவே கட்சி மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் நாளைக்கு கடிதத்தை எழுதி துன்பப்படுத்த நான் விரும்பவில்லை.
ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுக் கடிதம் தொடர்பில் எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு பின்னர் அறிக்கை கொடுப்பேன். ஏனெனில் வருடத்தின் முதல்நாளில் அரசியல் குழப்பங்கள் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பதில் கொடுக்க நான் விரும்பவில்லை. அதற்கு எனது மனமும் இடமளிக்கவில்லை.
இதே வேளை மாநகர சபை முதல்வர் விடயத்தில் நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்ற குற்றச்சாட்டை முழமையாக நிராகரிக்கிறேன்.
கட்சி தலைவர்கள் உறுப்பினர்கள் ஆராய்ந்து தான் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனை தான் நடைமுறைக்கு கொண்டு வந்தள்ளோம்.
மேலும் ஆனோல்ட்டை விட வேறு ஒருவரை போட வேண்டுமென சொல்லியிருந்தால் பரவாயில்லை. பெரும்பாலனவர்கள் ஆனோல்ட்டை என்றும் கூறியிருந்தனர். அத்தோடு ஆவரையே தெரிவு செய்து ஆதரிப்பதென அனைவரும் தீர்மானமாக எடுத்திருந்தனர்.