தீவகப் பகுதியில் இடம்பெறற காணி சுவிகரிப்புக்கு எதிராக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நான் தீர்மானம் நிறைவேற்றுகிறேன் சட்டத்தரணி ஜாம்பவான்க...
தீவகப் பகுதியில் இடம்பெறற காணி சுவிகரிப்புக்கு எதிராக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நான் தீர்மானம் நிறைவேற்றுகிறேன் சட்டத்தரணி ஜாம்பவான்களை வைத்துள்ள நீங்கள் நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை எடுங்கள் என கஜேந்திரர்களுக்கு அங்கஜன் இராமநாதன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை வேலணை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி குழு கூட்டத்திலியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வேலணை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி கலந்துரையாடல் இடம்பெற்றபோது வெளியில் கஜேந்திரர்கள் தலைமையில் இடம்பெற்ற காணி சுவீகரிப்பு எதிரான போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மக்களுடைய காணி சுவீகரிப்பதை நானும் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசாங்கத்துடன் பல விடயங்களில் இணக்கப்பாட்டுடன் செயற்படும் கஜேந்திரர்கள் போராட்டம் மேற்கொள்ளாமல் அரசாங்கத்துடன் பேசி தீர்வை எட்ட முயற்சிக்க வேண்டும் .
தீவகப் பகுதியில் காணி அளவிடும் பணிகள் தற்காலிகமாக இடை
நிறுத்தப்பட்டுள்ளதுடன் இதனை நிரந்தரமாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.