யாழ்.தீவகம் வேலணை - மண்கும்பான் ஜே.11 கிராமசேவகர் பிரிவில் மக்களுக்கு சொந்தமான குடியிருப்பு மற்றும் தோட்ட காணிகள் உள்ளடங்கலாக 15 ஏக்கர் காணி...
யாழ்.தீவகம் வேலணை - மண்கும்பான் ஜே.11 கிராமசேவகர் பிரிவில் மக்களுக்கு சொந்தமான குடியிருப்பு மற்றும் தோட்ட காணிகள் உள்ளடங்கலாக 15 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படுவதை கண்டித்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கடற்படையின் ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த காணிகளில் உள்ள “காஞ்சதேவ” கடற்படைமுகாமின் தேவைக்காக நிரந்தரமாக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதனை எதிர்த்தே காணி உரிமையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனர்.
தமது விருப்பத்திற்கு மாறாக காணியை சுவீகரிக்க முயற்சிக்கப்படுவதாகவும், தமது காணிகளை தம்மிடம் மீளவும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். எனவும் காணி உரிமையாளர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருக்கின்றனர்.