யாழ் மாநகர சபையை திரையிடப்படும் கயேந்திரர்களின் விசுவாசிகளான கள்ள மணல் கடத்தல்காரருக்கும் வேலை வாய்ப்புத் தருவதாக மக்களை ஏமாற்றி பணமோசடி செய...
யாழ் மாநகர சபையை திரையிடப்படும் கயேந்திரர்களின் விசுவாசிகளான கள்ள மணல் கடத்தல்காரருக்கும் வேலை வாய்ப்புத் தருவதாக மக்களை ஏமாற்றி பணமோசடி செய்த ஒருவரையும் எக்காரணம் கொண்டும் எனது கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாநகர சபையில் முதல்வர் பதவியை ஏற்றினான் எனது ஆட்சி நிறைவுறும் காலப்பகுதி வரை மக்களுக்கு எனது சக்திக்கு உட்பட்டு அனைத்து விடயங்களையும் முடிந்தவரை நிறைவேற்றி கொடுப்பதற்கு தயாராக உள்ளேன்.
நான் அரசாங்க கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்ததாக கூறும் கொள்கை அல்லாத அச்சு ஒன்றாய் சேர்ந்தவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
நான் ஆதரவு கேட்டவர்களிடம் எனது கொள்கையை முன்னிறுத்தி ஆதரவை கேட்டிரந்தேன் எனது கொள்கையை ஏற்றவர்கள் எனக்கு ஆதரவு தந்தார்கள்.
யாழ்மாநகர சபையில் தமிழ் மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட சட்டவிரோத செயல்பாடுகளுடன் தொடர்பு படாத உறுப்பினர்கள் அனைவரும் என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வாறு பயணிப்பவர்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம்.
ஆயினும் தமிழ் மக்கள் தேசிய முன்னணியில் போட்டியிட யாழ் மாநகர சபையில் பதவி வகிக்கும் இரு உறுப்பினர்களில் ஒருவர் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வழக்குகள் இடம்பெற்று வருகிறது ஒருவர் யாழ் மாநகர சபையில் வேலை வாய்ப்புத் தருவதாக பலரிடம் நிதி பெற்றதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தாங்களாக விரும்பினால் கூட எம்முடன் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.