யாழ் மாநகர சபையில் விஷ்வலிங்கம் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் யாழ் மாநகர எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அம...
யாழ் மாநகர சபையில் விஷ்வலிங்கம் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் யாழ் மாநகர எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு ஆரம்ப ஒதுக்கீடாக 10 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் யாழ் மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தர்ஷனாந் கருத்து தெரிவிக்கும் போது 10 லட்சம் ரூபா பணம் நினைவுத்தூபி அமைப்பதற்கு போதுமா என கேள்வி எழுப்பியிருந்தார் இந்த நிலையில் அதற்கு பதிலளித்த மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உங்களுடைய கட்சி எம்பி தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை பெற்று தருமாறு கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த தர்சானந் யாழ்ப்பாணம் மாநகர சபை, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் ஒரு கோடி ரூபாய் பணத்தை கோருமாக இருந்தால் அந்த பணத்தை பெற்றுத் தருவதற்கு நான் தயார் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.