அரியாலை கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்...
அரியாலை கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பிதேசத்தில் தொடர்ச்சியாக மண் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், நல்லூர் பிரதேச செயலர் மற்றும் பிரதேச பொலிஸ் அதிகாரி ஆகியோருடன் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியிருந்தார.
இதன்போது சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.