நான் தெரிவித்த இரு விடயங்களை பின்பற்றாததால் சுகாதார அமைச்சரின் கொரோனா தொற்றிற்கு நான் பொறுப்பேற்க முடியாது என கேகாலை ஆயுர்வேத வைத்தியர் தம்...
நான் தெரிவித்த இரு விடயங்களை பின்பற்றாததால் சுகாதார அமைச்சரின் கொரோனா தொற்றிற்கு நான் பொறுப்பேற்க முடியாது என கேகாலை ஆயுர்வேத வைத்தியர் தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.
முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனது மருந்தினை பயன்படுத்துபவர்கள் மாமிசம் மது மற்றும் சிகரெட்டினை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என நான் கேட்டுக்கொண்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்ட இரு விடயங்களை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி செய்தார் இதன் காரணமாக நான் அவரின் நோய்க்கு பொறுப்பேற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.