ஒற்றுமைப்படாத தமிழ் கட்சிகளின் கூட்டினால் எதையும் சாதிக்க முடியாதாநிலையில் தமிழ் மக்கள் தமக்கான சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தி தமக்கான ...
ஒற்றுமைப்படாத தமிழ் கட்சிகளின் கூட்டினால் எதையும் சாதிக்க முடியாதாநிலையில் தமிழ் மக்கள் தமக்கான சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தி தமக்கான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும் என கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.
நேற்றைய தினம் புதன்கிழமை யாழில் உள்ள அவரது தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கட்சிகள் எனச் சொல்வோர் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக்கி தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்களிடம் நான் வெளிப்படையான கோரிக்கையை முன் வைத்தேன் எனக்கு பல ஆசனங்கள் வேண்டாம் ஐந்து அல்லது ஆறு ஆசனங்களை தாருங்கள் தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சினைகள் மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருகிறேன் எனத் தெரிவித்தேன் இரு ஆசனங்களே கிடைத்தது.
தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து பல பேச்சுக்களை பேசியுள்ளார்கள் அவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி தான் தனியாக செயல்பட வேண்டுமென வெளியே நிற்கிறது இவ்வாறு ஒரே நிலைப்பாட்டில் வர முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க போகிறார்கள்.?
தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை ஆனால் மக்களுக்கு யதார்த்தமான அரசியலையே என்னால் முன்னெடுக்க முடியும் அதற்கு இவர்களால் ஒத்துப் போக முடியுமோ ? என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது .
இலங்கை கடல் எல்லைக்குள் உயிரிழந்த இந்திய மீனவர்கள் தொடர்பில் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாமல் இருக்க இந்திய அரசாங்கம் மீனவர் தொடர்பில் உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
வடபகுதி மீனவர்களின் கடல் வளத்தை இந்திய மீனவர்கள் அத்துமீறி அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இலங்கை மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி முறைகளை விரைவில் நிறுத்துவேன்.
அரசாங்கம் எனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு தந்தமை தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் வடக்கு தெற்கு உறவினை பலப்படுத்துவதற்காக எனக்கு வழங்கியுள்ளார்கள்.
இந்திய அரசாங்கத்துடன் நான் நல்லினக்கத்துடன் செயல்படுகிறேன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய அரசாங்கத்துடன் அக்கறையுடன் செயல்படுவது மக்களின் பிரச்சனைகளுக்காக அல்ல அவர்களின் இந்திய நாட்டில் இருக்கும் சொத்துக்களை பாதுகாப்பதற்கே.
ஆகவே தமிழ் மக்களுடைய பிரச்சினையை உண்மையில் தீர்க்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரும்பவேண்டுமே அல்லாமல் பத்திரிகை விளம்பரத்துக்காக பேசுகிறோமென பாசாங்கு செய்ய கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.