சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ள பின்னணியில் அம்பாலந்தோட்டை மற்றும் எம்பிலிபிட்டி போன்ற பகுதிகளில் தேங்காயின் நிறைக்கு அமைய அதனை வி...
சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ள பின்னணியில் அம்பாலந்தோட்டை மற்றும் எம்பிலிபிட்டி போன்ற பகுதிகளில் தேங்காயின் நிறைக்கு அமைய அதனை விற்பனை செய்ய சில வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை காரணமாக நுகர்வோர் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இதன்படி ஒரு கிலோ கிராம் தேங்காய் 120 முதல் 140 வரையான விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சாதாரண தேங்காய் ஒன்றின் நிறை ஒரு கிலோ கிராமிற்கும் அதிகம் என்பதுடன் சிரட்டையுடன் தேங்காய்க்கு பணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.