வடமராட்சி கிழக்குப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பனை மர மரங்களைத் தறித்து வைத்திருந்தவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இராணுவத்தினர் ம...
வடமராட்சி கிழக்குப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பனை மர மரங்களைத் தறித்து வைத்திருந்தவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த பகுதியில் பெருமளவிலான பனைமரங்கள் மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை ராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.