யாழ் மாநகர சபையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக ஒரு உறுப்பினர் நிதி பெற்றதாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர் மு...
யாழ் மாநகர சபையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக ஒரு உறுப்பினர் நிதி பெற்றதாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர் முன்வந்தால் வழக்கு தொடர நான் தயாராக இருக்கிறேன் என யாழ் மாநகர முதல்வர் மணி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாநகர சபையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கொள்கை இலலாத கட்சியைச் சேர்ந்த யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் நிதி பெற்றதாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் யாழ் மாநகர சபை வளாகத்துக்கு வெளியில் இடம்பெற்றதால் யாழ் மாநகர சபை சட்டரீதியாக அனுக சட்ட ஏற்பாடுகள் குறைவாக உள்ளது.
இருப்பினம் பாதிக்கப்பட்ட நபர் தான் முன்வந்து நீதி பெற்று தருமாறு கேட்கும் பட்சத்தில் அவருக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.