யாழ் மாநகரசபையின் இன்றைய பட்ஜெட் கூட்டத்தின்போது வெளிநடப்பு செய்வதாக பூச்சாண்டி காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன்...
யாழ் மாநகரசபையின் இன்றைய பட்ஜெட் கூட்டத்தின்போது வெளிநடப்பு செய்வதாக பூச்சாண்டி காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் மீண்டும் வந்து அமர்வில் கலந்து கொண்டார்.
இதேநேரம் வாக்கெடுப்பின்போது மாநகர வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
யாழ்ப்பாண மாநகரசபை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் எதிர்ப்பு தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது.
மக்கள் பார்வைக்கு முன் முன்வைக்கப்படவில்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.