யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் அகற்றப்பட்டது தொடர்பில் துணைவேந்தர் தெரிவித்த கருத்து. எழுத்துமூல...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் அகற்றப்பட்டது தொடர்பில் துணைவேந்தர் தெரிவித்த கருத்து.
எழுத்துமூலமாக எமக்கு அனுப்பப்பட்டது சட்டபூர்வமற்று எது கட்டப்பட்டாலும் அகற்றப்படவேண்டும். அகற்றப்பட்டபின் அதனை அறிவிக்கவேண்டும். தமக்கு இது கட்டப்பட்டது தொடர்பில் புலனாய்வு மூலம் தகவல் கிடைத்தது . அதனால் இந்த விடயத்தை பராமரிப்பு பகுதி தரப்பினருக்கு அனுப்பியிருந்தேன். எனவே அதனை வைத்துக்கொண்டிருக்க முடியாது. அகற்றப்படவேண்டிய விடயம்.
சின்ன அத்திவாரக்கல்லு வைப்பதென்றாலும் உரிய அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் இவ்வாறு உள்ளது.
சிலர் இங்கு தமக்கு அரசியல் இலாபம் தேடுகின்றனர்.
ஆர்வக்கோளாறில் வந்திருக்கினம், மிரட்டல்களை தான் கையாளுவேன் அவர்கள் தாங்களாக போகாது விடின் கையாளுவோம் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.