நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்தம் மக்களின் அபிவிருத்தி வேலைகளுக்கு வழங்கப்படும் 10 மில்லியன் ரூபாவில் 7 மில்லியன் ரூபாவை வடமாகாண மக்கள...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்தம் மக்களின் அபிவிருத்தி வேலைகளுக்கு வழங்கப்படும் 10 மில்லியன் ரூபாவில் 7 மில்லியன் ரூபாவை வடமாகாண மக்களின் அடிப்படை அபிவிருத்தி தேவைகளுக்கு முன்னாள் வடமாகாண ஆளுநரும் தற்போதை நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் ஒதுக்கியுள்ளார்.
இந்த 7 மில்லியன் ரூபாவில் போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5.5 மில்லியன் ரூபாவும் வவுனியா மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு தலா 5 இலட்சம் ரூபாவும் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிதியானது, இளைஞர்கள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப செயற்திட்டங்களுடாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் இராகவனின் அலுவல உத்தியோகத்தர்கள் கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறுபட்ட தரப்பினரை சந்தித்துள்ளதோடு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கும் விஜயம் மேற்கொண்டு இந்த நிதியினை பகிர்ந்தளிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.