பாடசாலைக்குச் சென்ற முதல் நாளே விபத்தில் சிக்கி ஆறு வயதுடைய சிறுவன் பலியாகியுள்ள சோக சம்பவம், பதுளையில் இன்று(15) காலை இடம்பெற்றுள்ளது. பது...
பாடசாலைக்குச் சென்ற முதல் நாளே விபத்தில் சிக்கி ஆறு வயதுடைய சிறுவன் பலியாகியுள்ள சோக சம்பவம், பதுளையில் இன்று(15) காலை இடம்பெற்றுள்ளது.
பதுளை, அசேலபுர பகுதியை சேர்ந்த சிவனேசன் வருன் ப்ரஜிஷ் எனும் ஆறு வயதுடைய குறித்த மாணவன் பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் இணைவதற்காக அவருடைய பாட்டி மற்றும் இரட்டை சகோதரருடன் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கன்டேனர் ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் குறித்த மாணவனுடைய பாட்டி பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.