நாளை (16) முதல் இந்தியா வழங்கிய அஸ்ட்ரா செனேகா கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக...
நாளை (16) முதல் இந்தியா வழங்கிய அஸ்ட்ரா செனேகா கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டது என (சார்ஜென்ட்-அட்-ஆர்ம்ஸ் ) நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்நிலையில் 16, 17, 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை கொழும்பில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு வருகை தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதேவேளை ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் இன்று (15) முதல் அதி அபாய வலயத்திற்கு உட்பட்ட மேல் மாகாணத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசியை வழங்கத் தொடங்குவதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடப்பட வேண்டிய குழு பொதுமக்களுடன் நெருக்கமாக தொடர்புகொள்பவர்கள் மற்றும் தொற்றுநோய்களின் அதிக ஆபத்துகளை எதிர்கொள்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார்.