தடைகளை மீறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு – கிழ...
தடைகளை மீறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73ஆவது சுதந்திர நாளான இன்று கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொலிஸாரின் தடைகளை மீறியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரிநாளை பிரகடனப்படுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தபட்டடுள்ளன.