யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விட...
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி கிளிநொச்சி நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி இரணைமடுச் சந்தியை சென்றடைந்தது.
இதன்போது அங்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களிடம் கிடைத்த பாரிய ஆதரவு கண்டு தாம் நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது நகைச்சுவையான விடயம் இல்லை எனவும், மக்கள் உணர்ச்சி பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை காலை 8 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு பேரணி ஆரம்பிக்கும்.