வடமேல், மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கான நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021....
வடமேல், மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கான நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.02.15) கேட்டறிந்து கொண்டார்.
இம்மாகாணங்களுக்கான நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம், அவற்றை துரிதமாக செயற்படுத்த வேண்டிய முறை மற்றும் 2024ஆம் ஆண்டளவில் அவ்வனைத்து திட்டங்களையும் நிறைவு செய்தல் தொடர்பில் அலரி மாளிகையில் கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சினால் ஓராண்டில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் புதிய நீர் இணைப்புகள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தன. எனினும் புதிய அரசாங்கத்தின் கீழ் ஓராண்டில் 4 இலட்சம் புதிய நீர் இணைப்புகள் வரை வழங்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.
2021ஆம் ஆண்டு முதல் 5 இலட்சம் புதிய நீர் இணைப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், எதிர்காலத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதை நெறிப்படுத்தி, வீதிகளை உடைத்து தண்ணீர் குழாய்கள் பொறுத்தப்படாது, அதற்கு பதிலாக, சுரங்கப்பாதை வழியாக குழாய்களை பொறுத்துவதன் மூலம் நீர் இணைப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி பிரியத் பந்து விக்ரம அவர்கள் தெரிவித்தார்.
வீதிகளை உடைத்து குழாய் அமைப்புகளை இடும்போது புதிய நீர் இணைப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் சுமார் நாற்பது சதவீதம் இழப்பீட்டுக்காக செலவிடப்படுவதாகவும், சுரங்க முறையை கையாள்வதன் மூலம் அப்பணத்தை சேமிக்க முடியும் என்றும் செயலாளர் அவர்கள் கூறினார்.
இதுவரை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மாதாந்த வருவாய் 28 மில்லியனாக காணப்படுவதுடன், எதிர்காலத்தில் அதனை 40 மில்லியன் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக இச்சந்திப்பில் கலந்துகொண்ட நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க அவர்கள் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கு புதிய அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, நீர்ப்பாசனத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இம்மாகாணங்களுக்கான நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம், அவற்றை துரிதமாக செயற்படுத்த வேண்டிய முறை மற்றும் 2024ஆம் ஆண்டளவில் அவ்வனைத்து திட்டங்களையும் நிறைவு செய்தல் தொடர்பில் அலரி மாளிகையில் கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சினால் ஓராண்டில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் புதிய நீர் இணைப்புகள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தன. எனினும் புதிய அரசாங்கத்தின் கீழ் ஓராண்டில் 4 இலட்சம் புதிய நீர் இணைப்புகள் வரை வழங்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.
2021ஆம் ஆண்டு முதல் 5 இலட்சம் புதிய நீர் இணைப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், எதிர்காலத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதை நெறிப்படுத்தி, வீதிகளை உடைத்து தண்ணீர் குழாய்கள் பொறுத்தப்படாது, அதற்கு பதிலாக, சுரங்கப்பாதை வழியாக குழாய்களை பொறுத்துவதன் மூலம் நீர் இணைப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி பிரியத் பந்து விக்ரம அவர்கள் தெரிவித்தார்.
வீதிகளை உடைத்து குழாய் அமைப்புகளை இடும்போது புதிய நீர் இணைப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் சுமார் நாற்பது சதவீதம் இழப்பீட்டுக்காக செலவிடப்படுவதாகவும், சுரங்க முறையை கையாள்வதன் மூலம் அப்பணத்தை சேமிக்க முடியும் என்றும் செயலாளர் அவர்கள் கூறினார்.
இதுவரை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மாதாந்த வருவாய் 28 மில்லியனாக காணப்படுவதுடன், எதிர்காலத்தில் அதனை 40 மில்லியன் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக இச்சந்திப்பில் கலந்துகொண்ட நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க அவர்கள் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கு புதிய அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, நீர்ப்பாசனத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.