புரவி புயலால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட மீனவர்களின் விபரங்களை தருமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் மீன்பிடி வளத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனந...
புரவி புயலால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட மீனவர்களின் விபரங்களை தருமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் மீன்பிடி வளத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் புரவிப் புயலால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட மீனவர்கள் தொடர்ப்பில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டாலும் சிலரது பெயர்கள் விடுபட்டதாககச் சொல்லப்படுகிறது.
அகவே சகலரது கோரிக்கைகளையும் உள்வாங்கி ஒரு வார காலத்துக்குள் தமக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.