பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி வடமராட்சி மண்ணுக்கு வந்தடைந்தது. வல்லைச் சந்தியில் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை...
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி வடமராட்சி மண்ணுக்கு வந்தடைந்தது.
வல்லைச் சந்தியில் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து காண்பித்தவாறு இருந்தனர். எனினும் அதனை மீறி மக்கள் எழுச்சிப் பேரணி வடமராட்சி மண்ணுக்கு வந்தடைந்தது.
நெல்லியடி, பருத்தித்துறை செல்லும் பேரணி அங்கிருந்து வல்வெட்டித்துறை சென்று பொலிகண்டி என்ற இலக்கை இன்று மாலை சென்றடையும். அங்கு பேரணியில் பங்கேற்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஒரே குரலில் வாழ்வுரிமையை வலியுறுத்தி சர்வதேசத்திடம் நீதி கோருவார்.
வடக்கு – கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.