தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வு ஜெனிவா அமர்வில் கிடைக்கா வில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும் சுமந்திரன் கஜேந்திரகுமார் தெரிவித்து வரும் கருத்த...
தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வு ஜெனிவா அமர்வில் கிடைக்கா வில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும் சுமந்திரன் கஜேந்திரகுமார் தெரிவித்து வரும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்பதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது நடைபெற்று முடிந்த ஜெனிவா அமர்வு தமிழ் மக்கள் எதிர்பார்த்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை அரசசை கொண்டு செல்வதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமை துரதிர்ஷ்ட சம்பவமாகும்.
நடைபெற்று முடிந்த ஜெனிவா அமர்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஜெனிவா தீர்மானம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜெனிவா அமர்வு கடந்த 22ஆம் திகதி முடிவுற முன்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் ஜெனிவா தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக தெரிவித்துவிட்டார்.
அதனை ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த கருத்து தமிழரசுக்கட்சியின் கருத்தே அன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல என தெரிவித்தமை யாவரும் அறிந்ததே.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவது போல ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் நிகழவில்லை மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் முடக்கப்பட்டு விட்டன எனக் கூறிவரும் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜெனிவா என்பது உலக வல்லரசுகளின் ஆதிக்கத்திற்குரிய சபையாக இருக்கின்ற நிலையில் ஒவ்வொரு நாடும் தனது நலன்களிலே அதிக அக்கறை காட்டும்.
இலங்கைக்கு எதிராக 22 நாடுகள் ஜெனிவாவில் ஒன்றுதிரண்டு இறுதிப் போரில் இடம்பெற்ற சாட்சியங்களை திரட்டுவதற்காக முன்வைத்த பிரேரணை வரவேற்கத்தக்க விடையமாகும்.
மனித உரிமை போரவையில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்வதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமை இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்க கூடிய ஒன்றாகும்.
அதுமட்டுமல்லாது இலங்கை தொடர்பிலான சர்வதேசத்தின் கவனம் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பது குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரா படுத்துவதற்கான அழுத்தங்களுக்கு வழிவகுக்கும்.
ஜெனிவா தொடர்பில் அரசியல்வாதிகள் தாங்கள் நினைத்த மாதிரி கருத்துக்களை முன் வைக்காமல் தமிழ் மக்களுக்கு வெளிப்படையான கருத்தை தெரிவிக்க வேண்டும்.
சுமந்திரன் கூறுவது போல ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு வெற்றி என்பதும் கயேந்திரகுமார் கூறுவது போன்று ஒன்றுமே நடக்கவில்லை எனக் கூறுவதும் தமிழ் மக்களை குழப்புவதாக அமைந்துவிடும்.
தமிழ் மக்கள் எதிர்பார்த்த இலக்கு ஜெனிவா அமர்வில் கிடைக்காவிட்டாலும் உரிய இலக்கை அடைவதற்குரிய ஆரம்பமாக மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை வைத்துக்கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை பாரப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்