இந்நாட்டு சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்திய ஏகபோகத்தை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்திற்கு சிறிது காலம் தேவைப்படுவதாக விவசாய அமைச்சர் மஹ...
இந்நாட்டு சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்திய ஏகபோகத்தை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்திற்கு சிறிது காலம் தேவைப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசி தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாரஹேன்பிட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது அரசாங்கம் மீது மேற்கொண்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அரசி மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் ஆராய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (22) முற்பகல் நாரஹேன்பிட பொருளாதார மத்திய நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.