யாழ்நகரில் இன்றைய தினம் PCR பரிசோதனைக்காக அதிகமானவர்கள் இன்னமும் காத்திருப்பதனாலும் பலர் சமூக இடைவெளியை பேண தவறியுள்ளமையால் நாளையும் தொடர்சி...
யாழ்நகரில் இன்றைய தினம் PCR பரிசோதனைக்காக அதிகமானவர்கள் இன்னமும் காத்திருப்பதனாலும் பலர் சமூக இடைவெளியை பேண தவறியுள்ளமையால் நாளையும் தொடர்சியாக PCR பரிசோதனை மேற் கொள்ளலாம்.
இன்று காலை முதல் தங்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக நீண்ட நேரமாம காத்திருக்கும் யாழ் நகரின் நவீன சந்தையை சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களும் அந்த வர்த்தக நிலையங்களில் பணிபுரிபவர்களும் எந்த வித சமூக இடைவெளியையும் பேணாதநிலையில் காணப்படுவது குறித்து கடும் விமர்சனங்கள் பல தரப்பிலும் எழுந்துள்ளன.
இவர்கள் தங்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக நீண்ட வரிசையில் மக கவசத்தை சரியாக அணியாமல் ஒருவருக்கொருவர் மிக அருகில் சமூக இடைவெளியை பேணாத நிலையில் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றமையை கருத்தில் கொண்டு யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் சம்மந்தபட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நாளையும் தொடர்சியாக PCR பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அதே வேளை சமூக இடைவெளியை இறுக்கமாக பேணுமாறும் யாழ் வர்த்தக சங்கத்தையும் யாழ் மாநகர பொதுச் சுகாதார வைத்தியரை இதை முறையாக நாளை நடைமுறைபடுத்தவும் வேண்டியுள்ளார்.
யாழில் கணிசமான மக்கள் முகக்கவசத்தை நாடிக்கவசமாக அணிவதிலும் சுகாதார உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளை மீறுவதிலும் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டதன் விளைவு. நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் ஒரெ நாளில் அடையாளம். இன்றைய நிலவரப்படி யாழில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்ற ஐவரில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்திலேனும் விழித்துக்கொண்டு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற முன்வாருங்கள்