கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் 957 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 74 ல...
கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலில் 957 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அந்த மாநிலத்திலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதே நேரத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள 9 தொகுதிகளில் மட்டும் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.