கெக்கிராவ பகுதியில் பாடசாலை மாணவியொருவரை வீடியோ எடுத்து, பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய சக மாணவர்கள் பற்றிய அதிர்ச்சி தகவல் அண்மையில் வெளியாக...
கெக்கிராவ பகுதியில் பாடசாலை மாணவியொருவரை வீடியோ எடுத்து, பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய சக மாணவர்கள் பற்றிய அதிர்ச்சி தகவல் அண்மையில் வெளியாகியிருந்தது.
15 வயதான மாணவர்களே இந்த செயலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த பகுதியிலுள்ள சந்துனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியும், தரிந்து என்ற மாணவனும் அயலில் வசித்தனர். இருவரும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தனர்.
தூங்கும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் ஒன்றாகவே வளர்ந்தனர். சந்துனியின் தாயார் சிறுவயதிலேயே இறந்து விட, சகோதரியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
அதே வகுப்பில் படித்த மிலிந்த என்ற மாணவனுடன், சந்துனி காதல் வசப்பட்டார். இருவரும் பாடசாலையில் சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
சிறிதுநாளில், அந்த உறவு பாடசாலைக்குள் அனைவருக்கும் தெரிந்த பகிரங்க உறவானது.
அதே வகுப்பில் படித்த சமத் என்ற மாணவன், தரிந்துவுடன் பேசி, காதலர்களை வீடியோ எடுக்கும் திட்டத்தை தீட்டினார். மிலிந்த, சந்துனி இரகசியமாக பேசி சந்தித்து கொள்ளும் சந்தர்ப்பத்தில் இரகசியமாக படம் பிடித்து, தமது ஆசையை நிறைவேற்றலாமென ஆலோசனை தெரிவித்தான்.
முதலில் தரிந்து மறுத்த போதும், பின்னர் அதற்கு ஒப்புக் கொண்டான்.
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியுடன் இருவரும் பாடசாலைக்கு சென்று, சந்துனி- மிலிந்த ஜோடியை வீடியோ எடுக்க முயன்றனர். ஆனால் உடனடியாக அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
சில நாள் கழித்து பாடசாலையில் நிகழ்வொன்று நடந்தது. இதை பயன்படுத்தி, பாடசாலையின் ஒதுக்குப்புறமான இடமொன்றிற்கு சென்ற மிலிந்த- சந்துனி ஜோடி நெருக்கமாக- உல்லாசமாக இருந்துள்ளது.
அந்த ஜோடியின் மீது ஒரு கண் வைத்திருந்த சமத்- தரிந்து இருவரும் அந்த ஜோடியை இரகசியமாக பின்தொடர்ந்து, அவர்கள் நெருக்கமாக இருந்ததை வீடியோ படம் பிடித்துள்ளனர்.
மறுநாள் பாடசாலைக்கு மிலிந்த வரவில்லை. பாடசாலை முடிந்த போது, சந்துனியை இருவரும் நெருங்கி, தம்மிடமுள்ள வீடியோ விபரத்தை தெரிவித்தனர். தாம் சொல்வதை போல நடக்காவிட்டால், அவரது சகோதரியிடம் வீடியோவை காண்பிப்பதாகவும் மிரட்டினர். அதை கேட்டு வெலவெலத்து போனார் சந்துனி.
அந்த வீடியோவை நீக்கும்படி கெஞ்சினார்.
மாலையில் தரிந்து வீட்டுக்கு வந்தால், வீடியோவை நீக்கலாமென இருவரும் தெரிவித்தனர்.
வீட்டிற்கு வந்த சந்துனிக்கு என்ன செய்வதென தெரியவில்லை. அவரது ஒரே நம்பிக்கை சகோதரி மட்டுமே. அவருக்கு விடயம் தெரிவதை சந்துனி விரும்பவில்லை. எனவே, மாலையில், தரிந்து வீட்டுக்கு சென்றார். அவர்களது வீட்டிலிருந்து 400 மீற்றர் தொலைவில் தரிந்துவின் வீடிருந்தது.
சந்துனி இரகசியமாக அங்கு சென்ற போது, வீடியோவை சகோதரிக்கு காண்பிக்காமலிருப்பதென்றால் தாம் சொல்வதை போல நடக்க வேண்டுமென கூறி, வீட்டுக்குள் இழுத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர்.
சந்துனிக்கு யாரிடமும் இதை சொல்ல முடியவில்லை. தாள முடியாத வேதனையில் மனதிற்குள்ளேயே குமைந்தபடி வீடு சென்று இரகசியமாக அழுதாள். ஓரிரு நாட்கள் அழுதாள். பின்னர் பாடசாலை சென்றாள்.
சமத், தரிந்து அதன் பின்னர் அந்த வீடியோவை காண்பித்து சுமார் 3 வாரங்களாக பலமுறை அவளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டனர். தரிந்து வீட்டில் பகலில் பெற்றோர் இருக்காததை வாய்ப்பாக பயன்படுத்தி, அந்த வீட்டிலேயே இந்த பாதகத்தை தொடர்ந்தனர்.
மாலையில் அடிக்கடி சந்துனி காணாமல் போவதால், அவரது சகோதரி சந்தேகமடைந்தார். யாருக்கும் தெரியாமல் இரகசியமாக செல்லும் சந்துனியை, எப்படியாவது பின்தொடர்வதென விழிப்பாக இருந்து, ஒருநாள் பின்தொடர்ந்தார்.
தரிந்து வீட்டுக்கு சகோதரி செல்வதை அவதானித்து, சற்று தாமதமாக அந்த வீட்டுக்குள் திடீரென சகோதரி நுழைந்தார்.
அங்கு அவர் கண்ட காட்சி திகைப்படைய வைத்தது.
அவரது சிறிய சகோதரியை, இரண்டு சக மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்தனர்.
அவர் உடனடியாக தனது சகோதரியை அழைத்துக் கொண்டு கெக்கிராவ பொலிஸ் நிலையம் சென்றார்.
மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார், இரண்டு மாணவர்களையும் கைது செய்துள்ளனர். மாணவர்கள் இருவரும் தற்போது விளக்கமறியலில் உள்ளனர்.