ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவ...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதானவர்களுள் 202 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 83 பேரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.