யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான தெரிவு தொடர்பில் சுமார் 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்மவட்ட...
யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான தெரிவு தொடர்பில் சுமார் 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்மவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு இவ்வருடம் வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கான தெரிவுகள் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்று வருகின்றன.
தெரிவுகளில் தமது பெயர் உள்ளடக்கப்படவில்லை என பல முறைப்பாடுகள் வந்து சேருகின்றது.
ஆகவே குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க படுவதோடு தற்போது வெயிடப்படும் பட்டியல் இறுதி பட்டியல் அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.20