யாழ்மாவட்டத்தில் கொரோனா அனர்த்த நிலமை ஏற்படாவிட்டாலும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்...
யாழ்மாவட்டத்தில் கொரோனா அனர்த்த நிலமை ஏற்படாவிட்டாலும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் சுமார் 1200 போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
தேசிய கொவிட் செயலணி தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் யாழ் மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி திணைக்களங்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களங்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் பரப்புகின்ற கொரோனா வைரஸ் காற்று மூலம் அதிகளவில் பரவுவதாக சுகாதார தரப்பினர்கள் அச்சம் வெளியிடும் நிலையில் பொதுமக்கள் தேவையற்ற போக்குவரத்துக்களை தவிர்ப்பது நல்லது.
ஆகவே பாடசாலைகள் அனைத்தும் இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் அனைவரும் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் எதிர்வரும் நாட்களில் கொவிட் காட்டுபாடு முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.