வட மாகாணத்தின் 'கிராமத்துடன் கலந்துரையாடல்' முதலாவது நிகழ்வு, வவுனியா மாவட்டத்தின், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட வெடிவை...
வட மாகாணத்தின் 'கிராமத்துடன் கலந்துரையாடல்' முதலாவது நிகழ்வு, வவுனியா மாவட்டத்தின், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் இன்று இடம்பெறவுள்ளது.
போகஸ்வௌ மகா வித்தியாலய வளாகம், இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது 17ஆவது 'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்வாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கும் இந்நிகழ்வில், மாவட்டத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.
வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில், போகஸ்வௌ 1, போகஸ்வௌ 2, கம்பிலிவௌ, வெடிவைத்தகல்லு, கோவில்புளியங்குளம் மற்றும் வெஹரதென்ன ஆகிய கிராமங்கள் அடங்குகின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி, பதுளை மாவட்டத்தில் 'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்பின்னர், மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை, பொலனறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகலை, காலி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போகஸ்வௌ மகா வித்தியாலய வளாகம், இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது 17ஆவது 'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்வாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கும் இந்நிகழ்வில், மாவட்டத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.
வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில், போகஸ்வௌ 1, போகஸ்வௌ 2, கம்பிலிவௌ, வெடிவைத்தகல்லு, கோவில்புளியங்குளம் மற்றும் வெஹரதென்ன ஆகிய கிராமங்கள் அடங்குகின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி, பதுளை மாவட்டத்தில் 'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்பின்னர், மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை, பொலனறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகலை, காலி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.