பிறக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு சகலருக்கும் சவால்களை வெற்றி கொள்ளும் தன்னம்பிக்கையையும் துன்பம் நீக்கிய மகிழ்ச்சியையும் வழங்க வேண்டுமென இ...
பிறக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு சகலருக்கும் சவால்களை வெற்றி கொள்ளும் தன்னம்பிக்கையையும் துன்பம் நீக்கிய மகிழ்ச்சியையும் வழங்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான திருமதி. அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
பிறக்கும் புத்தாண்டு மட்டுமல்ல எமது எல்லா கொண்டாட்டங்களும் விழாக்களும் கலைகளும் பாரம்பரிய சம்பிரதாயங்களுடனும் தொண்மை வாழ்ந்த வரலாற்றுடனும் நெருங்கிய தொடர்புடயவை.
அது மட்டுமின்றி துன்பங்களினால் துவண்டு விடாமலும் தன்னம்பிக்கை இழந்து விடாமலும் சவால்களை முறியடித்து முன் செல்லும் தைரியத்தையும் தேவையையும் நமக்கு உணர்த்துகின்றன.
எல்லா நலன்களும் கிடைத்தால்தான் முழுமையான மகிழ்ச்சி என்றில்லாமல் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மகிழ்ச்சியாக்கி மகிழும் உயரிய பண்பு எனக்கு இருப்பதால்தான் எம்மால் ஒவ்வொரு சம்பவங்களையும் லாவகமாகக் கடந்து செல்லுமு; பக்குவமும் ஏற்படுகின்றது.
எமது பண்டிகைகள் விழாக்கள் மற்றம் கலை அம்சங்களை வெறுமனே கொண்டாட்டங்களாக மட்டும் அனுபவிக்காமல் அவ்வாறான நிகழ்வுகள் கற்பிக்கும் பாரம்பரியங்களை அழியாமல் காக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
கடந்த கால துன்பங்களை வென்று நிகழ் காலத்தை மகிழ்ச்சியாக்கி எதிர்காலத்தை நமதாக்கிக் கொள்ளும் வல்லமையை நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என இந் நாளில் வாழ்த்துகிறேன்.