போயா தினத்தை முன்னிட்டு ராணுவத்தினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் ராணுவத்தி...
போயா தினத்தை முன்னிட்டு ராணுவத்தினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் ராணுவத்தின் 51-வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியின் நெறிப்படுத்தலில் கோப்பாய் செல்வபுரம் கிராமத்தில் போயா தினத்தை முன்னிட்டு ராணுவத்தினரால் உலர் உணவு பொதி மற்றும் சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
ராணுவத்தின் 51வது படைப் பிரிவு அமைந்துள்ள செல்வபுரம் கிராமத்தில் 300 பேருக்கு உலர் உணவு பொதிகளும் 300 பேருக்கு சமைத்த உணவுப் பொதிகளும் ராணுவத்தினரால் இன்றைய போயா தினத்தில் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் ராணுவத்தின் 51-ம் படைப் பிரிவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.