யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி, தேர்த் திருவிழா நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஆலயத்தி...
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி, தேர்த் திருவிழா நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் (26) இடம்பெற்றது.
இந்த தேர்த் திருவிழாவில் கலந்துக்கொண்டிருந்த பெரும்பாலான பக்தர்கள், முகக் கவசம் அணிந்திருக்கவில்லை.
இந்த நிலையில், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.