மரக்கன்று நடும் சுபநேரமான இன்றைய தினத்தில் (16) நடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷரினால், சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு வெண்சந்...
மரக்கன்று நடும் சுபநேரமான இன்றைய தினத்தில் (16) நடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷரினால், சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு வெண்சந்தனக் கன்றொன்று வழங்கிவைக்கும் நிகழ்வு கால்டன் இல்லத்தில் நேற்று (15) நடைபெற்றது.
தமிழ் சிங்கள புத்தாண்டு சடங்கின் மரக்கன்று நடும் புண்ணிய நிகழ்வு இன்று (16) காலை 6.40 மணிக்கு கிழக்கு நோக்கி இடம்பெறவுள்ளது.
இச்சடங்கின் பிரதான நிகழ்வு அகுணுகொலபெலஸ்ஸவில் அமைந்துள்ள சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்கமைவாக மரக்கன்று நடும் சடங்கு நாடளாவிய ரீதியிலும் இடம்பெறவுள்ளது.