ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியில், வைத்தியசாலைக்கு ஒக்சிஜன் தேவை ...
ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியில், வைத்தியசாலைக்கு ஒக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 20 கொவிட் தொற்றாளர்களுக்கு ஒக்சிஜன் வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஒக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக அறிய முடிகின்றது.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு மேலதிகமாக, கொவிட் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
120 நோயாளர்கள் மாத்திரமே அனுமதிக்க முடியும் என்ற நிலையில், ஐ.டி.எச் வைத்தியசாலையில் தற்போது 138 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அதேபோன்று, அவசர சிகிச்சை பிரிவில் உள்ள 8 கட்டில்களும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சித்திரை புத்தாண்டின் பின்னரான காலத்தில், கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.