கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த 10 தமிழர்களை கடற்படையினர் ...
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்த வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த 10 தமிழர்களை கடற்படையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
சிலாபம் − இரணமடு பகுதியில் வைத்தே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்
முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 10 சந்தேகநபர்களும் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கவிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.