கொழும்பு – கொம்பனித் தெருவில் உள்ள தபால் நிலையத்தின் ஊழியர்கள் 21 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள 45 ஊழியர்களி...
கொழும்பு – கொம்பனித் தெருவில் உள்ள தபால் நிலையத்தின் ஊழியர்கள் 21 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்குள்ள 45 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
மேலும் இவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.