பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும், எதிர்வரும் செவ்வாய்கிழமை (25) அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்...
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும், எதிர்வரும் செவ்வாய்கிழமை (25) அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு அமல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 28ம் திகதி அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.