யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 241 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த...
யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 241 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த மாவட்ட பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதில் சிறுமி ஒருவர் காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு 60 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக ரீ.என் சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சிறு தொழில் முயற்சியாளர்கள் 9 பேர் காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரீ.என்.சூரியராஜா, பாதிப்புக்கள் தொடர்பில் அனைத்து விவரங்களும் பிரதேச செயலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு மத்திய அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வேலணை, காரைநகர் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.