இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் முழு பயணக் கட்டுப்பாடு நேற்றிரவு 11 மணி முதல் அமல்பட...
இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் முழு பயணக் கட்டுப்பாடு நேற்றிரவு 11 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை (17) அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இந்த காலப் பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை தவிர, வேறு எந்தவொரு தரப்பினரும் வெளியில் செல்லக்கூடாது என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் இந்த காலப் பகுதியில் மூடப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
எவரேனும் ஒருவர் சுகயீனமடையும் பட்சத்தில் அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முடியும் என அவர் கூறினார்.
எனினும், எதிர்வரும் 17ம் திகதி வரை தேசிய அடையாளஅட்டை நடைமுறை செலுப்படியாகாது என அவர் குறிப்பிடுகின்றார்.