தமிழ் - சிங்கள புத்தாண்டு கொத்தணியின் தாக்கம் வட மாகாணத்திலும் கணிசமான கொரோனா நோயாளிகளை உருவாக்கியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் இவ்வ...
தமிழ் - சிங்கள புத்தாண்டு கொத்தணியின் தாக்கம் வட மாகாணத்திலும் கணிசமான கொரோனா நோயாளிகளை உருவாக்கியுள்ள நிலையில்
யாழ்ப்பாணத்தில் மட்டும் இவ்வாரம் 300 நோயாளிகள் இனங்காணப்பட்டு உள்ளனர்.
சுகாதார துறை மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் செயல்பட்டு வருகின்ற அதே வேளையில், வடமாகாண சுகாதாரத் துறையின் கீழ் இயங்கி வரும் சுதேச மருத்துவத் திணைக்களத்தைச் சார்ந்த மருத்துவர்களுக்கு கொரொனா தொடர்பான தடுப்பூசி ஏற்றப்படாத , முக்க்கவசங்கள் வழங்கப்படாத நிலையில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பாக தனியே ஒரு மருத்துவர் பணிபுரியும் இடங்களில் மாற்று வழியின்றி தொடர்ந்து பணிபுரிய வேண்டிய நிலைகளில் உள்ளனர்.
இந்நிலையில் சித்த/ ஆயுள்வேத மருத்துவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
வட மாகாண சித்த மருந்துமனைகளில் சிகிச்சை பெற
வரும் நோயாளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்த தனிமைப்படுத்தும் வசதிகள், வெப்பநிலை அளவிடும் கருவிகள் என்பன வழங்கப்பட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்கவில்லை.