சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழ் ஊடக அமையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது படுகொலை செய்ய...
சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழ் ஊடக அமையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு கொரோனோ தொற்றில் உயிரிழந்தவர்களையும் நினைவு கூர்ந்ததுடன், கொரோனோ பெரும் தொற்றலிருந்து மக்கள் மீண்டு வரவேண்டும் எனவும் பிரார்த்திக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனோ தொற்று காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.