வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை அலுவலக உதவியாளர் தாக்கியதில் பணிப்பாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட...
வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை அலுவலக உதவியாளர் தாக்கியதில் பணிப்பாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி வலயத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் ஒருவர் ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் அவரது கோவையை அனுப்பும் விடயமாக இன்று காலை உரையாடச் சென்ற சமயம் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்த கருத்தில் உடன்படாது பணிப்பாளரை முதலில் கையால் தாக்கியுள்ளார். இதன் போது வலயக் கல்விப் பணிப்பாளர் மயக்கமுற்று வீழ்ந்த நிலையில் காலால் ஏறி உலக்கியதில் மேலும் பாதிக்கப்பட்டதனால் வலயக் கல்விப் பணிப்பாளர் அவசரமாக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பணிப்பாளரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் உடனடியாக சி.சி.ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெறும் போது வலயப் பணிமனையில் பணியாற்றும் வேறு உத்தியோகத்தர்கள் கண்கண்ட சாட்சிகளாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.