வெளிநாடுகளிலிருந்து எதிர்வரும் 21ம் திகதி நள்ளிரவு முதல் எந்தவொரு பயணியும் இலங்கைக்கு வருகைத் தர முடியாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை...
வெளிநாடுகளிலிருந்து எதிர்வரும் 21ம் திகதி நள்ளிரவு முதல் எந்தவொரு பயணியும் இலங்கைக்கு வருகைத் தர முடியாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.