நாடு முழுவதும் 3 நாட்கள் தளர்வின் பின்னர் இன்று இரவு 10 மணி தொடக்கம் மீண்டும் முழுநேர பணத்தடை அமுலுக்கு வருவதாக தேசிய கொவிட் தடுப்பு செயலண...
நாடு முழுவதும் 3 நாட்கள் தளர்வின் பின்னர் இன்று இரவு 10 மணி தொடக்கம் மீண்டும் முழுநேர பணத்தடை அமுலுக்கு வருவதாக தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதன்படி இன்று இரவு 10 மணிக்கு நாடு முழுவதும் அமுலாகும் பயணத்தடை மீண்டும் வெள்ளிக் கிழமை அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என தற்போது கூறப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அபாயத்தை தணிப்பதற்காக மே மாதம் 21ம் திகதி
அறிவிக்கப்பட்ட பயணத்தடை நேற்று முன்தினம் 21ம் திகதி தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.