இன்று (2021.06.18) அதிகாலை 2 மணியளவில் அனலைதீவு-கரம்பன் பகுதியில் கஞ்சா கடத்தி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்...
இன்று (2021.06.18) அதிகாலை 2 மணியளவில் அனலைதீவு-கரம்பன் பகுதியில் கஞ்சா கடத்தி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
அனலைதீவு கடல் பகுதியால் இருவர் கஞ்சா கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அவர்கள் கடலில் வைத்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த கஞ்சாப் பொதிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் கைது செய்யப்பட்ட 26 மற்றும் 31 வயதுகள் கொண்டவர்களில் ஒருவர் மன்னாரையும் மற்றையவர் அனலைதீவு பகுதியையும் சேர்ந்தவர்கள்.