புங்குடுதீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி எடுத்துச் செல்லப்பட இருந்த 16 கிலோ மாடு மற்றும் ஆட்டு இறைச்சி கடற்படையினரால் நேற்றைய தினம் வியாழக...
புங்குடுதீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி எடுத்துச் செல்லப்பட இருந்த 16 கிலோ மாடு மற்றும் ஆட்டு இறைச்சி கடற்படையினரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை புங்குடுதீவு பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி நோக்கி எடுத்துச் செல்லப்படுவதாக நெடுந்தீவில் இருந்து படகு மூலம் புங்குடுதீவுக்கு குறித்த இறைச்சிகள் எடுத்து வரப்பட்டுள்ளது.
பின்னர் லொறி ஒன்றில் ஏற்றப்பட்டு புங்குடுதீவு ஊடக எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த லொறி வழி மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
சோதனையின்போது குறித்த வாகனத்தில் ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகள் பெட்டிகளில் மறைக்கப்பட்ட மை கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.