முன்னாள் பிரதி சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 19வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில்...
முன்னாள் பிரதி சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 19வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 3 பேர் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. முன்னைநாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் உபாலி பொன்னம்பலம், முன்னாள் அதிபர் இ.ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நினைவஞ்சலி செய்வதற்கு 25ற்கும் மேற்பட்ட பொலீஸார் குவிக்கப்பட்டு பொது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கப்படதோடு, ஊடகவியலாளர் படம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.