யாழ்.பருத்தித்துறை - தும்பளை பகுதியில் 6 மாத குழந்தை மற்றும் 9 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. நேற்று முன்த...
யாழ்.பருத்தித்துறை - தும்பளை பகுதியில் 6 மாத குழந்தை மற்றும் 9 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை சளி காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்ற 13 வயதுச் சிறுமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருடன் நேரடித் தொடர்பு கொண்ட குடும்பத்தினருக்கு நேற்று வெள்ளிக்கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 6 மாத குழந்தை மற்றும் 9 வயதுச் சிறுவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.