யாழ்.கோப்பாய் மத்தியில் வசிக்கும் வயோதிபப் பெண் இரவில் விரக்தியில் கத்துவதால் அயலவர்கள் பாதிக்கப்படுவதாக கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று அயலவ...
யாழ்.கோப்பாய் மத்தியில் வசிக்கும் வயோதிபப் பெண் இரவில் விரக்தியில் கத்துவதால் அயலவர்கள் பாதிக்கப்படுவதாக கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று அயலவரையும் பிள்ளைகளையும் நேற்று (17) பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து தாயை பிரச்சினை இல்லாமல் பார்க்கும்படி அறிவுரை கூறி அனுப்பினர்.
கோப்பாய் மத்தி சோனெழு பகுதியைச் வயோதிபப் பெண்ணாலே இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.
மூன்று பிள்ளைகள் இருந்தும் அவர்கள் திருமணம் முடித்து சென்றுவிட்டதால் தாயை சரியாகப் பார்க்க முடியாமல் போனதால் இந்தத் தாய்க்கு இந்த நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக பக்கத்து வீட்டுக்காரரை திட்டித் தீர்ப்பதும் தொடர் கதையாக இருந்து வந்தது.
தாயை சரியாகப் பார்க்காமல் விட்டுவிட்டு அதாவது தாயுடன் ஒரு பிள்ளையும் இருக்காமல் விட்டு விட்டு தாய்க்கு இந்த நிலைமை வந்ததும் பக்கத்து வீட்டுக்காரரால் தான் தாய்க்கு பிரச்சினை என்று சாட்டு போக்கு கூறி வந்தனர்.
பக்கத்து வீட்டுக்காரர் கோப்பாய் பிரதேச செயகத்தில் முறையிட்டும் பயன்கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர். பிள்ளைகளை அழைத்த பொலிஸார் தாயை பார்க்கும்படி அறிவுரை கூறி அனுப்பினர்.
என்று பாதிக்கப்பட்ட அயல்வீட்டுகாரர் தெரிவித்தார் ..